இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

சருகுகள்

மெல்லஅடியெடுத்து
வைக்கும்போது
சர் என்றும்
வேகமாக ஓடும்போது
சரசர என்றும் ஒலியுணர்த்தலில்
வலியினைப் பரிமாறிக் கொள்கின்றன
கிளைகளிருந்தபோது
வருடிய காற்றில்
சலசலத்தும்,
சிலிர்த்தும்
புயல்காற்றில்
ஓவென்று கதறியும்
மழையில் நனைந்ததில்
கண்ணீராய்ச் சொட்டியதும்
இளமை கால நினைவுகள்
காய்ந்து உதிர்ந்து
காலடிகளில்
மெறிபட மெறிபட
பட்டறிவில் பிடிபடுகிறது
வாழ்க்கை !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக