இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

நியாத்தை யாரிடம் சொல்ல ?

உண்மையைச் சொன்னால் உதைப்பார்களே
பொய்யோடே பழகியவர்கள்
பூட்டிவைத்துப் பூட்டிவைத்துப்
புழுத்துபோன உண்மைகள்
நிகழ்காலத்தில் செல்லாதாகிக்
கடந்தகாலத்துப் பெருமைகளாய்
வலம் வருகின்றன
உயரே உயரே பறந்தாலும்
ஊர்க்குருவிதானே பொய்
உண்மைதானே பருந்து
மழை பொய்க்கிறது ஆனாலும் பெய்கிறது
ஆருடம் பொய்க்கிறது ஆனாலும் பலிக்கிறது
இவைகள் பொய் தரும் நம்பிக்கை
அடுத்தவன் உழைப்பைச் சுரண்டுவோம்
ஆனாலும் பொதுமை பேசுவோம்
அடுத்தவன் பணத்தில் குடிப்போம்
ஆனாலும் மதுவை ஒழிப்போம்
உண்மை தரும் நம்பிக்கையின்மை
போலிக்குப் போலியானதாய்
உண்மைக்கும் உண்மை உறைந்துகிடக்கிறது
நியாயத்தை யாரிடம் சொல்ல ?
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக