இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

தனிமை

நிழல் குல்லா
மாட்டிவிடும்
மரங்கள்
பாதங்களுக்குப்
பனி உணர்த்தும்
புற்கள்
வண்ணங்களின்
வகை அறிவிக்கும்
மலர்கள்
கீச்சிடல்களால்
இருப்பைப் பதிவிடும்
பறவைகள்
இறந்த காலங்களைத்
தோண்டிப் பார்க்கும்
நினைவுகள்
இப்படியாக
தனி ஆவர்த்தனம்
வாசித்தபடி இருந்தது
தனிமை
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக