இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

பொழுது

யாருமற்ற வெளியில்
நான்
நேரங்கள் சிந்தனைகளால்
களவாடப்பட்டன
என்னை
ஏறஇறங்கப் பார்த்துத்
தலைகோதி சென்றது
காற்று
யாரடா இவன் ?
எரிச்சல் பார்வையில்
மௌனம் சாதித்த
மரங்கள்
கைகள் பிடுங்கியப்
புற்களில் பனிநீர்
அழுகை
அகல விரிந்த
விழிகளுக்குள்
கவிதை பிறந்த மகிழ்வில்
பொழுது விடிந்தது !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக