இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

சினம்

என்னைத் தெரிந்தவர்களுக்கு
நான் கோபக்காரன்
ஆனால் பாருங்கள்
யாரும் அச்சப்படுவதில்லை
என்னை அறிந்தவர்கள்
எப்போது கோபப்படுவேன்
என்ற தேர்வு வென்று
கைத்தேர்ந்தவர்களாகி
விட்டனர்
கோபந்தானே எனக்கு
பலமின்மை
அவர்களுக்கு
பலம்
இயலாமை புலப்படும்
கோபத்தைப் புரிந்த
தந்தரசாலிகள்
சாதிக்கின்றனர்
எப்போது அறுபடும்
இந்த கோபம் ?
உடன்பிறந்ததாயிற்றே
விடுமா உடனே ?
குணத்தையுமா
விடச் சொல்கிறீர் ?
குணம் வேண்டின்
கோபம் இருந்து விட்டுப்
போகட்டுமே
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக