இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

ஐயனார் கோவில் முட்டை

யாருமற்ற இரவில்
சுற்றும் முற்றும்
நோட்டம் விட்டபடி
அடியெடுத்து வைக்கிறான்
மஞ்சைப்பைத் துழாவியதில்
வெளிவந்த முட்டை
உதடுகளின் உச்சரிப்பில்
சிலநொடிகள்
உருவேற்றலின் பின்
ஐயனார் குதிரையின்
கால்களில் தஞ்சமடைகிறது
முட்டை வைத்தாகிவிட்டது
யாருக்கு வலிக்கிறதோ? இல்லையோ?
முட்டையிட்டக் கோழிக்கு
கண்டிப்பாய் வலித்திருக்கும் !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக