இராதே

இராதே
eradevadassou

புதன், 10 ஜனவரி, 2018

பரண்

சிலந்தி நெய்த கூரையில்
தூசிப் போர்வைக்குள்
துயின்றிருந்தன
சுவடிகள்
தும்மலுக்குக்
கம்பளம் விரிக்கும்
பழைமை நெடி
நாசி புகுதலில்
கிளர்ந்தெழும்
ஓசைகள்
எலி கொறித்த
பக்கங்களில்
தேடினேன்
காணவில்லை
கவிதை வரிகள்
                                             - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக