இராதே

இராதே
eradevadassou

வியாழன், 4 ஜனவரி, 2018

நெசவு

சடசட சடவென
பஞ்சுமேகத்திலிருந்து
நூலெடுத்து
வானத்துக்கும் பூமிக்குமாய்
இழைகளை முடிச்சிட்டுக் கொண்டே
ஏரி , கிணறு , கண்மாயென
எண்ணற்ற அழகியத் தரைவிரிப்புகள்
மலைமகளுக்குத் தாவணியும் ,
துப்பட்டாவுமான அருவிகள்
சில இடங்களில் அலையும்
திரைச் சீலைகள்
இயற்கையின் பச்சைப்
போர்வைக்கு
வெள்ளை கரை வைத்த ஆறுகள்
சின்னச் சின்னத் துண்டுகள் ,
துப்பட்டாக்கள் , ரிப்பன்களென
வாய்க்கால்கள்
கொசுறாகக் குட்டையைக் கைக்குட்டை என வகைவகையாய்
நெய்தது மழை
தான்தோன்றியாக
அனைத்தையும் கிழித்து
கந்தல் துணியாக்கி
வீணடிக்கிறோம் நாம் !
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக