இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 19 ஜனவரி, 2018

நாட்காட்டி

காற்றின் இருத்தலைத்
தாளின் அசைவுகளால்
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நாள்
கிழிபடும்போது
365 முறை
உணர்த்தப்படுகின்ற
மரணங்கள்
கிழிவதினால்
தேய்கிறதா ? வளர்கிறதா ?
நுழைய வைக்கும்
பட்டிமன்றத் தலைப்பு
ஒவ்வொரு கிழிதலிலும்
ஒரு நாளை வளர்த்துதான்
போகிறது
ஒவ்வொரு தேய்தலிலும்
ஒரு பட்டறிவை
விட்டுத்தானே செல்கிறது
இளைத்து வந்தாலும்
நினைவுகளைத் தொகுத்துதானே
வருகிறது ?
சிலருக்கு அது படம்
சிலருக்கு அது பாடம்
கிழிபட்டு உதிர்ந்தாலும்
ஆண்டொன்றைப்
பெருமையோடுக்
காட்டி மாய்கிறது
நாட்காட்டி
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக