இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

மௌனம்

எப்படித் தான் வெளியே
செல்வது ?
ஒன்றோடு ஒன்றுக்கூடி
குழப்பத்தில்
முணுமுணுத்தன
சொற்கள்
ஏன் இப்படி
நடந்து கொள்ளகின்றன
உதடுகள் ?
திடீர்
வேலை நிறுத்தத்தால்
கூடுதல் பணிச்சுமை வருமே
கதிகலங்கிப் போயிருந்தன
விழிகள்
ஓசைகளும் அசைவுகளும்
சிக்கலுக்குத் தீர்வுக் காண
வாயிடம் முறையீடு
செய்து கொண்டிருந்தன
பேச்சற்றச் சூழலில்
இவற்றையெல்லாம்
பொறுமையாக
வேடிக்கை பார்த்தது
மௌனம்
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக