இராதே

இராதே
eradevadassou

புதன், 10 ஜனவரி, 2018

கோலங்கள்

நீர்த் தெளித்துக்
கூட்டித் தள்ளி
அழகு ஊறக்
காத்திருந்து
புள்ளிகளால்
முத்தம் பெற்று
வளைந்து நெளிந்த
கோடுகளால்
வெட்கப்பட்டு
மார்கழி பூச்சூடும்
வாசலிலே
கால்பட்டு
அழிகின்றன
கோலங்கள்
                                       
- இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக