இராதே

இராதே
eradevadassou

சனி, 12 பிப்ரவரி, 2022

இலந்தைப்பழம்

 இலந்தைப் பழம் (74) 



நல்ல தூக்கம் தூங்கலாம் 

 நமக்கே இலந்தைப் பழந்தரும் ; 

பொல்லாப் பித்த நோய்களைப் 

 புரட்டிப் போட்டே தணித்திடும் ; 

உள்ளே மனத்தின் உளைச்சலை 

 ஒடுக்கி அமைதிப் படுத்திடும் ; 

மெல்லும் பற்கள் வலுப்படும் 

 மேனித் தோலும் ஓளிவிடும் ! 



 குருதிக் குழலின் இறுக்கத்தை 

 கூட நின்றே தளர்த்திடும் ; 

குருதி யோட்டம் நெறிப்படும் 

 குருதி அணுக்கள் மிகுந்திடும் ; 

குருதி அழுத்தம் உயர்ந்தெழக் 

 குறைத்தே இதயங் காத்திடும் ; 

பெருகும் வாந்தித் தலைச்சுற்றல் 

 பெருக்கம் அடக்கும் இலந்தைதான் ! 



 உடலின் எலும்புந் திடப்படும் 

 உடலின் சூடோ சமப்படும் ; 

உடலின் வலிகள் மறைந்திடும் 

 உடனே செரித்தல் நிகழ்த்திடும் ; 

உடலில் நரம்பு மேம்படும் 

 உறங்கும் பசியை உசுப்பிடும் 

உடலைக் காக்க ஓய்வின்றி 

 உழைக்கும் பழமே இலந்தையாம் ! 


                                                       - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக