இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

பெருங்காயம்

 பெருங்காயம் 



காயங் காக்கும் பெருங்காயம் 

 காற்று நோய்கள் நசித்திடுமாம் ; 

மாயம் ஆகுங் கக்குவான் 

 மறையும் பன்றிக் காய்ச்சலுமாம் ; 

நோயாம் இறுகும் மலச்சிக்கல் 

 நொடியில் நீர்த்தே இளக்கிடுமாம் ; 

நேயம் மிகுந்த பெருங்காயம்

  நிறைவைக் கொடுக்கும் பெருங்காயம் ! 



 குருதி ஓட்டம் முடுக்கிடுமாம் 

 குருதி நாளஞ் சீர்படுமாம் ; 

உருட்டுங் குடலின் சுழற்சியினை 

 ஒழுங்குப் படுத்திப் பார்த்திடுமாம் ; 

நெருடும் பசியைத் தூண்டிடுமாம் 

 நெளியுங் குடற்புண் மாய்த்திடுமாம் ; 

அருகும் நுண்மி இதைகண்டே 

அனைத்தும் மீட்கும் பெருங்காயம் ! 



 சினைப்பைக் கட்டி மறைந்திடுமாம் 

 சீர்ப்படும் மார்பின் நெரிச்சலுமாம் ; 

சினைக்கும் தொற்றினைச் சிதைத்திடுமாம் 

சிறப்பாய்ச் செரிக்கத் துணைப்படுமாம் ; 

முனைப்பாய் நிற்குங் கருத்தடைக்கே 

 முந்தித் தருமே உடற்குளிர்ச்சி 

சுனைப்போல் பயன்கள் சுரக்கின்றத் 

துணைவன் நமது பெருங்காயம் !

                                                                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக