இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

தான்றிக்காய்

 தான்றிக்காய் (78) 



 தான்றிக் காயாந் தான்றிக்காய் 

 தடுக்குஞ் சிலந்தி 'விடம்'தடுக்கும் ; 

ஊன்றிப் பார்க்கும் கண்நோய்கள் 

 ஒழங்காய்த் தீர வழிகாணும் ; 

தோன்றுந் தொண்டைக் கமறல்கள் 

 துரத்திக் குரலை வளப்படுத்தும் ; 

ஆன்ற மருந்தாய் அணிவகுத்தே 

 அனைத்துங் காக்குந் தான்றிக்காய் ! 



 வயிற்றுள் நெளியும் புழுக்களும் 

 வளரும் குடலுள் புழுக்களும் 

வயிற்றுப் போக்கும், பொருமலும் 

 மறந்தும் வராமல் நிறுத்திடுமே ; 

மயிர்க்கால் உதிர்தல் அகற்றிவிடும் 

 மலத்தை இளக்கி விலக்கிவிடும் 

உயிரை எடுக்கும் மூச்சழற்சி 

 உறுத்தல் தவிர்க்குந் தான்றிக்காய் ! 



 உடலைத் தேற்றி ஒளியேற்றும் 

 உருட்டுஞ் சளியை அறுத்துவிடும் ; 

குடலுள் நுண்மிக் கொன்றுவிடும் 

 குருதி மூலம் மட்டுப்படும் 

தொடரும் வாந்தி, நாவறட்சித் 

 தொல்லை எல்லாம் ஓடிவிடும் ; 

கடமை யாற்றி நமதுடலைக் 

 காக்குங் காயாந் தான்றிக்காய் !


                                                   - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக