இராதே

இராதே
eradevadassou

புதன், 9 பிப்ரவரி, 2022

அவகோடா பழம்

 அவகோடா பழம் (69) 



அவகோடா பழமே பழமே 

 அள்ளியள்ளிக் கொடைகள் தருமே ; 

தவமாக உடலைக் காக்கும் 

 தாய்சேயின் நலனைக் காக்கும் ; 

கவலையுறும் உடலின் பருமன் 

 கட்டுடலாய்க் குறைத்துக் காக்கும் ; 

துவலுகிற தேய்ந்த எலும்பைத் 

 தூண்போல வலிமை சேர்க்கும் ! 



 மூட்டுவலி, வாயின் நாற்றம், 

 முகவிழியின் பார்வைத் தொய்வு, 

வாட்டுகிற குருதி அழுத்தம், 

 வறட்சித்தோல் நோயின் சீற்றம், 

கூட்டியெழுங் குருதி இனிப்பு, 

 குளிர்விடுமாம் புற்று நோய்கள் 

ஆட்டுவிக்கும் அனைத்துப் பிணியும் 

 அவகோடா பழமே நீக்கும் ! 



 சிறுநீரின் தடங்கள் தடைகள், 

 சிறுநீர்ப்பைக் கற்கள் அடைப்பு, 

சிறுநீர்ப்பைச் சிக்கல் யாவும் 

 தீர்த்திடு மா மருந்து பழமாம் ! 

பெறுகின்ற பேறு கால 

 பெருமயக்கம் , வாந்தி தடுக்கும் ; 

அறுத்தழிக்கும் நோயின் வினைகள் 

 அவகோடா பழமே பழந்தான் ! 


                                                         - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக