இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

வெங்காயம்

 வெங்காயம் (73)  



கார நெடியில் கண்களைக் 

 கலங்க வைக்கும் வெங்காயம் ; 

ஈரல் அழற்சி,மூக்கெரிச்சல் 

 இருமல், பித்த ஏப்பமும் 

தீர வழிகள் நல்கிடும் 

 சிறுநீர்க் கற்கள் கரைத்திடும் ; 

மார டைப்பைத் தடுத்திடும் 

 மனத்தின் இறுக்கம் விலக்கிடும் ! 



 பித்த நீரின் சுரப்படக்கும் 

 பிரியுஞ் சிறுநீர்த் தொற்றடக்கும் ; 

நித்தங் குருதி ஓட்டத்தை 

 நெறியாய்ப் பாய்ச்சிச் சீராக்கும் ; 

மொத்த கணையக் கழிவுகளை 

 வெளியே தள்ளி நோயெதிர்க்கும் ; 

செத்துப் போகுங் கண்ணறைகள் 

 திரும்பும் பிழைக்க வழிவகுக்கும் !



வெட்டுக்  காயம் ஆற்றிடும்

     வெப்பந் தணிந்தே உடல்குளிரும் ;

கொட்டுங் குளவி விடந்தணிக்கும் 

 கொழுப்பைக் கரைத்தே அகற்றிவிடும் ; 

சொட்டும் இளமை மீட்டெடுக்கும் 

 துடிக்கும் இதய தோழனவன் 

கட்டுக் கடங்கா மூட்டுவலி 

 கட்டுப் படுத்தும் வெங்காயம் !


                                              - இராதே 


 (கண்ணறைகள் : செல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக