இராதே

இராதே
eradevadassou

புதன், 2 பிப்ரவரி, 2022

மாம்பழம்

 மாம்பழம்  

இளமை அழகை மீட்டெடுக்கும் 

 எழிலாய் உடலை வலுவாக்கும் ; 

வளமை கூடித் தோல்மினுக்கும் 

 மயக்கம் , சோகை மாற்றிவிடும் ; 

அளவாய்க் குருதி ஊற்றெடுக்கும் 

 அரற்றுஞ் சிறுநீர்க் கல்கரையும் ; 

களவுக் கொழுப்பைக் கண்டகற்றும் 

 கனிவு நிறைந்த மாம்பழமாம் ! 



 புற்றந் தொற்றும் மறைந்தேகும் 

 புதிய முறுக்கு நரம்பேறும் ; 

பற்றும் ' மாலைக் கண்'நோயும் 

 பதமாய் நழுவி வெளியேறும் ; 

இற்ற உடலும் எடைகூடும் 

 எகிறும் பசியைக் குறைத்தடக்கும் ; 

முற்றும் ஈரல் கசிவுகளும் 

 முக்கா டிட்ட ஓடிடுமாம் ! 



 தொல்லைக் கொடுக்கும் பல்வலியைத் 

தொடரா திருக்க செய்திடுமாம் ; 

எல்லா உணவும் இயல்பாக 

 எளிதில் செரிக்க வைத்திடுமாம் ; 

பொல்லாக் கண்ணீர் வடிதல்நோய் 

 புலம்பிப் போக வழித்தேடும் ; 

நல்லப் பழமாம் மாம்பழமாம்

    நன்மை பயக்கும் மாம்பழமாம் !


                                                - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக