இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 18 ஜனவரி, 2022

மாதுளை

 மாதுளை 


 சுத்த குருதி நிறத்திலே  

  சுவைகள் தெறிக்கும் பரல்களாய் 

முத்து முத்து மணியென 

   மூடித் தோலுள் மாதுளை 

சத்து பலவும் இதனிடம் 

   சளைக்க சளைக்க கிடைத்திடும் ; 

நித்தம் நித்தம் உண்ணுங்கள் ; 

   நிறைந்த பயனைக் கொள்ளுங்கள் ! 



 அத்து மீறும் கொழுப்பினை 

   அடக்கி எடையைக் குறைத்திடும் ; 

மெத்து மெத்து விதைகளால் 

   மேனித் தோலைப் பேணிடும் ; 

பித்த நோய்கள் தாக்கத்தைப் 

   பிடர்ப்பி டித்துத் தள்ளிடும் ; 

இத்துப் போன நரம்பினை 

   இயக்கி வலிமை கூட்டிடும் ; 



 தலையில் முடியின் வேர்களைத் 

   தழைக்க நன்கு உதவிடும் ; 

நிலைத்தே நினைவின் ஆற்றலை 

   நீடித்தி ருக்கப் பயன்தரும் ; 

குலைந்த இதயம் சீர்பட 

   குறித்த நன்மை தந்திடும் ; 

நலங்கள் வழங்கும் மாதுளையை 

   நாளும் விரும்பி உண்ணுவோம் ! 

                                                        - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக