இராதே

இராதே
eradevadassou

வியாழன், 27 ஜனவரி, 2022

கொத்துமல்லி

 கொத்துமல்லி



 மயக்கம் அறுக்கும் மாமருந்து 

 மனநோய்த் தீர்க்கும் மாமருந்து ; 

துயரங் கொடுக்கும் மதுமயக்கத் 

 துன்பம் நீக்கும் மாமருந்து ; 

தயக்க மின்றிப் பசித்தூண்டும் 

 சாம்பார், ரசத்தில் உணவாகும் ; 

பயன்கள் பலவும் தந்திடுமே 

 பண்பில் மணக்கும் கொத்துமல்லி ! 



 நரம்பு, எலும்பு மண்டலங்கள் 

 நலங்கள் மேவப் பாடுபடும் ; 

பரவுந் தோலின் நோய்த்தொற்றைப் 

 பதுங்கி ஓடச் செய்துவிடும் ; 

திரையும் புரையும் விழிகளிலே 

 தீண்டா வண்ணம் துணைநிற்கும் ; 

இரவில் இனியத் தூக்கத்தை

    இயல்பாய் அருளும் கொத்துமல்லி ! 



 எத்தும் குடற்புண் மறந்தோடும் 

 எளிதில் செரித்தே உடல்தேற்றும் ; 

பித்தக் காய்ச்சல் மிரண்டோடும் 

 பிணிகள் பலவும் அரண்டோடும் ; 

மெத்த மூளை வளர்ச்சியுறும் 

 மேனிக் கட்டு வலிமையுறும் ; 

கொத்து மல்லி சிறப்புகளைக் 

 கொணர்ந்தே உணவில் பயன்கொள்வோம் !

                                                                                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக