இராதே

இராதே
eradevadassou

வியாழன், 27 ஜனவரி, 2022

சீத்தாப் பழம்

 சீத்தாப் பழம்  



சோர்வு, சோம்பல், சோகையைத் 

 துரத்தி ஓடச் செய்திடும் ; 

பார்வை வளமும் மேம்படும் 

 படருந் தேமல் மறைந்திடும் ; 

ஆர்வ முடனே நினைவாற்றல் 

 அளவை அதிக மாக்கிடும் ; 

மார டைப்பைத் தடுத்திடும் 

 மருந்து பழமே சீத்தாவாம் ! 



 குருதிப் பெருக்கம் மேலிடும் 

 குருதி அழுத்தம் சமன்படும் ; 

அருகும் மூச்சுக் குழலதன் 

 அழற்சி நீங்கத் துணைபடும் ; 

சுருங்குந் தோலின் வறட்சியைத் 

 தோற்றப் பொலிவாய் மாற்றிடும் ; 

நெருக்கும் நச்சுக் கழிவினை 

 நீட்சி செய்தே அகற்றிடும் ; 



 தசையின் பிடிப்புச் சரிபடும் 

 தாக்கும் தொற்றோ விடுபடும் ; 

அசையா மலத்தை இளக்கிடும் 

 அறவே சளியை விலக்கிடும் ; 

அசையும் நரம்பு வலுப்படும் 

 அகத்துள் இன்பம் பிடிபடும் ; 

விசையாய் நன்மை பயத்திடும் 

 விருந்து பழமாம் சீத்தாவே !

                                                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக