இராதே

இராதே
eradevadassou

வியாழன், 27 ஜனவரி, 2022

கறிவேப்பிலை

கறிவேப்பிலை ( கறிவேம்பு )

 வாந்தி, குமட்டல், தலைசுற்றல் 

 வாய்ப்புண், சோகை, வயிற்றிரைச்சல்

 சீந்தும் மூலம், சீதபேதி 

 சீறும் பித்த நோய்களை 

ஏந்தும் உடலைச் சீராக்கும் ; 

 இயற்கைக் கொடையே கறிவேம்பு ; 

வேந்தாய் நின்று நலங்காக்கும் 

 விழையும் பயன்கள் விளைவிக்கும் ! 



 உதிரும் முடியும், இளநரையும் 

 உடனே நின்று கருகருக்கும் ; 

புதிராய்த் தோன்றும் நீரிழிவைப் 

 புரிந்துக் குறைக்க வழிகோலும் ; 

எதிர்க்கும் ஆற்றல், நோய்த்தடுப்பும் 

 எல்லாம் ஈணும் கறிவேம்பு 

எதிரி போன்றே ஒதுக்காமல் 

 இயல்பாய்ச் சேர்த்தே உண்ணுங்கள் !



தெளிவாய்ப் பார்வைத் திறன்கூடும் 

 சிதையும் ஈறுகள் வலிமைபெறும் ; 

களிங்குங் கெட்டக் கொழுப்புகளைக் 

 கரைக்கக் குருதித் தூய்மையுறும் ; 

எளிய மருந்தே கறிவேம்பு 

 எங்கும் கிடைக்குங் கறிவேம்பு ; 

துளியும் அதனைத் தவிர்க்காமல் 

 தொடர்ந்தே உண்டு மகிழுங்கள் ! 

                                                      - இராதே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக