இராதே

இராதே
eradevadassou

புதன், 26 ஜனவரி, 2022

புடலை

 புடலங்காய்  


வடிவில் பாம்பாய்த் தோன்றுமாம் 

 வளமை மிக்க புடலங்காய் ; 

தடித்த வயிற்றுப் பொருமலைத் 

 தவிர்க்கும் காயாம் புடலங்காய் ; 

வெடிக்கும் மூல நோய்தனை 

 விரைந்துச் சீர்மை செய்யுமே ; 

துடிக்கும் நரம்பு மேம்படத் 

 துள்ள லோடே இயங்கும் ! 



 தொண்டைப் புண்கள் ஆற்றுமே 

 தோன்றுஞ் சூட்டைத் தணிக்குமே ; 

கண்கள் பார்வைத் துலக்குமே ; 

மண்டை நினைவின் ஆற்றலை 

 மறதிப் போக்கிக் கூட்டுமே ; 

குண்டாய் உடலும் மாறிடக் 

 கொள்ளும் மருந்தே புடலங்காய் ! 



 காய்கள், வேர்கள், இலைகளும் 

 களிக்கும் மருந்தாய் மாறுமே ; 

நோயாம் மஞ்சள் காமாலை 

 நொடிக்க வைக்கும் புடலங்காய் ; 

நோய்க ளற்ற மேனியை 

 நுவலுங் காயே புடலங்காய் ; 

வாய்த்த இயற்கை மருந்திதாம் 

 வணங்கிப் புடலை உண்ணுவோம் ! 

 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக