இராதே

இராதே
eradevadassou

வியாழன், 20 ஜனவரி, 2022

பப்பாளி

 பப்பாளி


  மாவு, புரதம், நார்ச்சத்து 

 மண்டிக் கிடக்கும் பப்பாளி ; 

மேவும் நரம்புத் தளர்ச்சியினை 

 மேன்மை யுறுத்தி வளப்படுத்தும் ; 

நாவும் மகிழ்வில் நீருறும் 

 நன்கு செரிக்க வழிவகுக்கும் ; 

நோவும் சாவும் அண்டாமல் 

 நூறு வயது வாழ்விக்கும் ! 



 சிறுநீர்க கற்கள் கரைந்தோடும் ; 

 சிதையும் பற்கள் சீர்மையுறும் ; 

இறுகும் மலமும் இளகிவிடும் ; 

 எளிதில் உடலும் இளைத்துவிடும் ; 

குறுகும் முகத்தின் சுருக்கங்கள் 

 குன்றி முகமே பொலிவுபெறும் ; 

அறுமே கண்கள் கோளாறு ; 

 அனைத்தும் தருமாம் பப்பாளி ! 



 அழகுக் கூட்டும் பப்பாளி ; 

 அறிவைத் தூண்டும் பப்பாளி ; 

துழவித் துருவி நோய்த்தீர்க்கும் ; 

 துடிக்கும் இதய நலம்பேணும் ; 

முழக்க மிட்டே கூவுங்கள் 

 முதன்மை பழமே பப்பாளி ; 

பழத்தில் மருத்துவர் பப்பாளி ; 

 பறித்து பகிர்ந்தே தின்னுங்கள் ! 

                                                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக