இராதே

இராதே
eradevadassou

புதன், 26 ஜனவரி, 2022

பாகற்காய்

 பாகற்காய் 



 கசப்புச் சுவையே பாகற்காய் 

 கடிய பிணிக்கும் மருந்திடும் ; 

பசப்புச் செயல்கள் இன்றியே 

 பயன்கள் எடுத்து வீசிடும் ; 

அசத்தும் ஆற்றல் கொண்டதே 

 அரிய பண்பு நிறைந்தது ; 

கசக்கி பிழிந்து நோய்களைக் 

 கண்டே விரட்டும் பாகற்காய் ! 



 விடத்தின் கடுமை போக்கிடும் 

 விரவுந் தொற்றை மாய்த்திடும் ; 

படருஞ் சிரங்கு சொரிகளைப் 

 பதமாய்த் தீர்த்துக் கட்டிடும் ; 

தொடருங் குருதி சோகையின் 

 தொல்லை மறைய வித்திடும் ; 

குடலில் புழுக்கள் நீக்கிடும் 

 குருதிக் கொழுப்பை எரித்திடும் ! 



 இருமல், இழுப்பு, சளிதனை 

 இல்லா தாக்கி விலக்கிடும் ; 

பெருகும் மஞ்சள் காமாலை 

 பெயர்ந்தே ஓட செய்திடும் ; 

நெருக்கும் சிறுநீர்க் கற்களை 

 நிரவி உடைத்தே அகற்றிடும் ; 

குருதி இனிப்பைச் சரித்திடும் 

 கொடிய புற்றை அழித்திடும் ! 



 பொடுகுச் சிக்கல் விடுபடும் 

 பொலிவு தோலில் எதிர்படும் ; 

இடுக்கண் கொடுக்கும் ஈரல்நோய் 

 எதிர்த்து வெற்றிப் பெற்றிடும் ; 

கடுக்கும் மூல நோய்தனைக் 

 களைந்து நன்மை தந்திடும் ; 

அடுக்கும் பயன்கள் பலபல 

 அளிக்குங் காய்தான் பாகற்காய் !

                                                                  - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக