அன்னை தெரெசா பிள்ளைத்
தமிழ்
காப்புப் பருவம்
'இமயம்'
(32 சீர் விருத்தம்)
பரிதி விரிகதி ரொளிர மலையுறு
படல உறைபனி வெள்ளொளி விட்டெழும்;
பரவி உருகிட நழுவு நனிபனி
பருவ நடையினை யிட்டெழ மெட்டிடும்;
பசுமை வரையினை அணியுந் துகிலெனும்
பனியின் புகைபட ஒட்டறை நெட்டிடும் ;
படிக எதிரொளி யிடற மழைதரு
படித லமைவுற முட்டிடுங் கொட்டிடம் !
அரிது மலைவிழு மருவி தருமொரு
அரிய இசையெழ மத்தள மிட்டிடும் ;
அரவு வளைவென ஒடிய நடமிட
அலையும் வழிகளுங் கிட்டிடும் , கிட்டிடும் ;
அகிலின் மணமெழ அமல அசைவினை
அருளு மலையுடை வட்டிகை ஒத்திகை ;
அடநம் பெருகிடும் அமர ருலகினை
அடவி விரவிட நெட்டிடை முட்டிடும் !
பெரிய மடலிதழ் அவிழ மலரினம்
பெருக நறுமணம் புக்கிடம் சொக்கிடும் ;
பிடகை மரமிகு நிறைவு மெருகிடும்
பெருகு மலைவளம் செப்பிடும் அப்பிடும் ;
பெடையின் துணையொடு பரவும் சிறகினம்
பிணைவு மகிழுற முத்திடும் கத்திடும் ;
பிளிறு களிறுடன் பிடியு முலவிடும்
பெருமை இமமலை நல்லழ கெட்டிடும் !
உரிய உதவிக ளுதவும் குணமக
ளுருகு வறியவ ருற்றது விட்டிட
உலகு முழுவது மிளிர உலவிடு
முதய நிலவொளி வட்டெழு வித்தகி
உயர நிலையுடை ஒழுகு பணிவினை
உணரு மதியுடை நல்லவ ளுள்ளுய
ருறவு மலருறு மிமய மலைமக
ளொளிர அருளுக நற்றுணை யெட்டவே !
- இராதே