இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

கதவு

 கதவு


யார் யாரோ தட்டுகிறார்கள்
தீண்டாமை பார்ப்பதில்லை
யார் என்று கேட்பதில்லை
அமைதி சாதிக்கிறது
கதவு

எங்கே திறந்திடுவோமோ ?
அச்சத்தில்
இரட்டை தாழ்ப்பாள்
இட்டுக்கொள்கிறது
தமிழ் கதவு

காற்றின் போக்குவரவை
அடித்து பறைசாற்றும்
சன்னல் கதவு

சிறார்களின்
ஊஞ்சலாகிவிடுகிறது
வாயற் கதவு

பூவையரின்
பாதி முகங்காட்டித்
திறந்திடுமின்
கண்ணாரக் காண
மென்கதவு

சில நேரம்
பழுதடைந்ததை
கீச்சுக் குரலால்
காட்டிக் கொடுக்கும்
பழங்கதவு

கதவுகள் எப்போதும்
கதவுகள் தாம்
தாழ்ப்போடும்
தாழ்த்திறக்கும்

திறவாமல்
பூட்டியே கிடக்கின்றன
மனக் கதவுகள்

திறந்திடு சீசே !

                        - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக