இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 31 டிசம்பர், 2024

சிறை

 காத்துவாரியை

வெறித்தபடி இருந்தேன்


சிலந்தி பின்னிய வலையில்

சிறைபட்டிருந்தது

பிறைநிலா


காற்று வீச

பிணையில் வருமா நிலவு ?

சிந்தனைகள் நேரங்களை

இழுத்து சென்றன


விண்மீன்கள்

கூடிகூடி பேசியவாறு இருந்தன

மேகங்கள் அங்கும் இங்கும்

அலைமோதித் திரிந்தன


நீளும் இரவில்

நீள்வட்டத் திரையை மறைத்தது

கண்மூடும்

என் இமைகள்


                                      -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக