காத்துவாரியை
வெறித்தபடி இருந்தேன்
சிலந்தி பின்னிய வலையில்
சிறைபட்டிருந்தது
பிறைநிலா
காற்று வீச
பிணையில் வருமா நிலவு ?
சிந்தனைகள் நேரங்களை
இழுத்து சென்றன
விண்மீன்கள்
கூடிகூடி பேசியவாறு இருந்தன
மேகங்கள் அங்கும் இங்கும்
அலைமோதித் திரிந்தன
நீளும் இரவில்
நீள்வட்டத் திரையை மறைத்தது
கண்மூடும்
என் இமைகள்
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக