எழுத்து
பனி படர்ந்த
சன்னல் கண்ணாடியில்
விரல் தொட்டு எழுதுகிறேன்
தரை இறங்குகின்றன துளிகளாய்
மேசை பரப்பில்
படிந்திருந்த தூசி்ல் எழுதுகிறேன்
பறந்து விடுகின்றன துகள்களாய்
கடற்கரை மணலில்
எழுதினேன் மறைகின்றன அலைகளால்
கண்ணீரில் எழுதியவைகளைப்
பிய்த்து எறிகிறேன்
பதிந்துவிடுகின்றன இதயத்தில்
வடுக்களாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக