இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

எழுத்து

 எழுத்து


பனி படர்ந்த
சன்னல் கண்ணாடியில்
விரல் தொட்டு எழுதுகிறேன்
தரை இறங்குகின்றன துளிகளாய்

மேசை பரப்பில்
படிந்திருந்த தூசி்ல் எழுதுகிறேன்
பறந்து விடுகின்றன துகள்களாய்

கடற்கரை மணலில்
எழுதினேன் மறைகின்றன அலைகளால்

கண்ணீரில் எழுதியவைகளைப்
பிய்த்து எறிகிறேன்
 பதிந்துவிடுகின்றன இதயத்தில்
 வடுக்களாய்

              - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக