திருடும் கண்கள்
அசைவற்ற குளம்
அசைந்து ஊர்ந்தன
வெண்பஞ்சு முகில்கள்
மரத்தில் நுழைந்து
கிளையை வருடும்
காற்றின் தழுவலில்
சிலிர்த்து உதிர்ந்து
சிறுபடகாய் நகரும்
சறுகு
ஓயாத குரலொலிக்கும்
தவளைகள் பாயாதா ?
எதிர்பார்ப்பில்
நீந்தி நீந்தி சலித்த
நீர்ப்பாம்பின்
மௌனம்
ஒரே பாய்ச்சலில்
நிலவை உடைத்த
தவளை
ஒலித்த குரல்
கம்ம கம்ம
விழுங்கியபடி
குடிபுகிறது
நீர்ப்பாம்பு
மறுபடியும்
மயான அமைதி
சலனமற்ற இரவைக்
கவ்வியபடி
காட்சியைத் திருடின
கண்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக