இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

திருடும் கண்கள்

 திருடும் கண்கள்


அசைவற்ற குளம்
அசைந்து ஊர்ந்தன
வெண்பஞ்சு முகில்கள்

மரத்தில் நுழைந்து
கிளையை வருடும்
காற்றின் தழுவலில்
சிலிர்த்து உதிர்ந்து
சிறுபடகாய் நகரும்
சறுகு

ஓயாத குரலொலிக்கும்
தவளைகள் பாயாதா ?
எதிர்பார்ப்பில்
நீந்தி நீந்தி சலித்த
நீர்ப்பாம்பின் 
மௌனம்

ஒரே பாய்ச்சலில்
நிலவை உடைத்த
தவளை

ஒலித்த குரல்
கம்ம கம்ம
விழுங்கியபடி
குடிபுகிறது
நீர்ப்பாம்பு

மறுபடியும்
 மயான அமைதி
சலனமற்ற இரவைக்
கவ்வியபடி
காட்சியைத் திருடின
கண்கள்

                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக