நிலா மயக்கம்
கரையோர புதர்களில்
ஒளி துளிர்க்கும்
மின்மினிகளால்
கசங்கும் இரவில்
மஞ்சு இடை நுழைந்து
மின்னல் கொடி பற்றி
மகிழம்பூ நீர்விரிப்பில்
சறுக்கி விழுந்த
நிலா
வெகு இயல்பாய்த்
தத்திச் சென்று
நிலவை உடைத்த
சில்லு
கடக்கும் இடைவெளியில்
ஒவ்வொரு முத்தத்திலும்
வளையங்களை
உயிர்ப்பித்து
சிற்றலைகளைத் துரத்தி
கரையேறுகிறது
உடைந்த துண்டங்கள்
ஒன்றாக முழுநிலவின்
ஒளி பருகி மயக்கத்தில்
உறங்கிற்று
குளம்
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக