நடை
நீள் பயணத்தில்
வடம்பிடித்து அடம்பிடிக்கும்
மனத்தோடு
நடைபயிலும் கரையோரம்
தடம் பதிக்கும் கால்கள்
திரும்பிப் பார்க்கையில்
சுவடுகள் கலைக்கும்
அலைகள்
பயணத்தை நீட்டும்
மன அலைகள்
போகிறபோக்கில்
விட்டுச் செல்லும்
சிப்பிகளும் சங்குகளும்
சுமை இறக்கிய மகிழ்வில்
கரைநழுவும் அலைகள்
விடாது சுமக்கும்
நினைவலையோடு
நடை தொடரும்
மனது
எங்கே பயணம் ? எங்கே முடிவு ?
புலர்தலில் அவிழ்கிறது
புதிர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக