இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இமைகள்

 இமைகள்


விழிகளை நொடியில் காக்கும் ;

   விழும்பொருள் தடுத்து நிற்கும் ;

எழிலுறு முகமாய்க் காட்ட

   இயல்புடன் அழகுக் கூட்டும் ;

வழிகிற கண்ணின் நீரை

   வழித்திட உடனே மூடும் ;

பொழில்தரும் பூக்கள் போல

    புலர்ந்திடும் இமைகள் தாமே !


இளமையின் ஆவ லாலே

   இரப்பைகள் துடிக்கும் மெல்ல

வளமிகு சிமிட்டல் கண்டு

    வளருமே வளமை காதல்

அளவிடும் பணியின் இன்பம்

   அழகுற பதிக்க வைத்து

களவிட மனத்தைத் தூண்டி

   கமுக்கமாய் ஏவல் செய்யும் !


                  -  இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக