இமைகள்
விழிகளை நொடியில் காக்கும் ;
விழும்பொருள் தடுத்து நிற்கும் ;
எழிலுறு முகமாய்க் காட்ட
இயல்புடன் அழகுக் கூட்டும் ;
வழிகிற கண்ணின் நீரை
வழித்திட உடனே மூடும் ;
பொழில்தரும் பூக்கள் போல
புலர்ந்திடும் இமைகள் தாமே !
இளமையின் ஆவ லாலே
இரப்பைகள் துடிக்கும் மெல்ல
வளமிகு சிமிட்டல் கண்டு
வளருமே வளமை காதல்
அளவிடும் பணியின் இன்பம்
அழகுற பதிக்க வைத்து
களவிட மனத்தைத் தூண்டி
கமுக்கமாய் ஏவல் செய்யும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக