படித்துறை
தெப்பக் குளத்து
படித்துறையில்
மடிந்து மடிந்து
நிழலமர
நனையும் கால்களைச்
சுத்தப்படுத்தும்
மீன்கள்
சிறுகல் எறிதலில்
விலகி அசையும்
வளையங்களில்
நெளிந்து நெளிந்து
நிமிரும்
ஆழிமண்டப
பிம்பம்
மஞ்சள் குழைக்கும்
மாலை வெயில் வழிய
முங்கி கரையேறும்
பூவையரின் ஈரத்
துணியினூடே
சொட்டிச் சொட்டிப்
படிகளில் வழிகிறது
காமம்
வழுக்குகிறது
மனசு
துள்ளும் மீன்கள்
பொறியடித்து மூழ்க
கோபுர மாடத்தில்
பட படத்து வானேகும்
மணிபுறா
நாலாம் கால
மணியோசை
நிகழ் உலகிற்கு
இழுத்துவர
தென்றலுடன்
பயணிக்கிறேன்
இல்லந்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக