அந்தி
பொந்திலிருந்து
பாய்ந்து வந்து
வெற்று அலகோடு
பொந்து திரும்பும்
மீன்கொத்தி
மகிழ்வில் துள்ளும்
மீன்கள்
தோன்றி மறையும்
ஓட்டைகளில்
பாசி அடர்ந்த
குளம்
படித்துறையை
முத்தமிட்டு முத்தமிட்டு
எச்சைப் படுத்தும்
சிற்றலைகள்
நா நீட்டிப்
பூச்சிப் பிடிக்க
ஆடுங்கொடித் தாவும்
ஓணானின்
கதகளி
எங்கோ ஓசை கிளப்பி
அமைதியை
தொடர்இடைவெளியில்
சிறுக சிறுக குலைக்கும்
மரங்கொத்தி
மஞ்சள் ஒளி பரப்பி
இடம் நழுவும்
கதிரவன்
அந்தி பொழுதில்
கொன்று தின்னும்
கவலைகளிலிருந்து
மெல்ல மீள்கிறேன்
திரும்ப நடக்கிறேன்
தூரத்தில் வீடு
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக