காதலுறு நினைவுகளே கவிபுனைய வருவாயா ?
கட்டித்தேன் முத்தமதைக் கசிந்துருக தருவாயா ?
நினைவலைகள் நெஞ்சணையக் காதல்கரை தொடுவாயா ?
நிலாவிடுங் குளிர்க்கணையை எதிர்நின்றுத் தடுப்பாயா ?
வெண்பனியை விரல்கொண்டு வெய்யோனை மறைப்பாயா ? தனிமைநிலைப் பேணலிலே வெம்மைத்தீ அணைப்பாயா ?
விழியெழுதும் பார்வைமடல் விடுத்தகதை அறிவாயா ?
விழுந்தமனம் எழுந்துலவ வினைப்பயன் புரிவாயா ?
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக