இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

இலையுதிர்க் காலம்

 இலையுதிர் காலம்


இலைகள் அகல
மனமில்லா விட்டாலும்
பட்ட மரங்களாய்க்
காட்சிப்பட்டன
மொட்டையடிக்கப்பட்ட
பசுமரங்கள்

ஒவ்வொரு உதிரலிலும்
பிரிதலில் புலம்பி 
சறுகுகள் விரிக்கும்
பாட்டைகளில்
ஓடி வந்து
மரங்களைக் கட்டிப்பிடித்து
அழுகின்றது
முதுமை

சறுகுகளுக்கு இது
இனப்பெருக்கக் காலம்

 கூட்டிப் பெருக்கிப்
புதைப்பதில் உரம்
சேர்த்து கொளுத்தி எரிப்பதில்
சாம்பல்

வசந்த கால நினைவுகளை
அசைபோடும் முதுமையின் முன்
இரண்டு வினாக்கள்
உரமா ? சாம்பலா ?

சிந்திக்கும் வேளையில்
மீண்டும் வருவேன்
சொல்லாமல் சொல்லிற்று
இலையுதிர் காலம்
                     - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக