தண்ணீர்த் தவம் !
எடுப்பு
கண்ணே கதை கேளு !
கண்மணியே கதை கேளு !
பொன்னே கதை கேளு !
பூமணியே கதை கேளு !
( கண்ணே )
தொடுப்பு
தண்ணீர் வந்த கதை !
தாகந்தான் தீர்ந்த கதை !
கண்ணீர் நிறைந்த கதை !
காலங்கள் நனைக்கும் கதை !
( கண்ணே )
முடிப்பு
ஆயி அழுத கண்ணீர்
ஆறாகப் பெருகி வந்தே
ஆளும் நகர்நனைத்த
அன்புநீர் வார்த்த கதை !
தாயி உதிர்த்த செந்நீர்
தானாகப் பெருகி வந்தே
தவிக்கும் வாய்க்க ளித்த
தாயன்பு சுரந்த கதை !
( கண்ணே )
பொறிஞர் " லாம ரெசின் "
பொறுப்பானப் பெருந் தவத்தால்
பொங்கும் பூம்பு னலாய்ப்
புதுவைக்கு வந்த தண்ணீர் !
அறிஞர் அவர்தொ டுத்த
ஆற்றல் மிகுசூ ளுரையால்
ஆறாய்ப் பாய்ந்து வந்த
ஆரமுத நீரின் கதை !
( கண்ணே )
- இராதே


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக