இராதே

இராதே
eradevadassou

திங்கள், 30 டிசம்பர், 2024

தண்ணீர்த் தவம் !

    தண்ணீர்த் தவம் !


             



              எடுப்பு


கண்ணே கதை கேளு !

   கண்மணியே கதை கேளு !

பொன்னே கதை கேளு !

    பூமணியே கதை கேளு !       

  ( கண்ணே )


             தொடுப்பு


தண்ணீர் வந்த கதை !

   தாகந்தான் தீர்ந்த கதை !

கண்ணீர் நிறைந்த கதை !

   காலங்கள் நனைக்கும் கதை !          

( கண்ணே )


                 முடிப்பு


ஆயி அழுத கண்ணீர்

   ஆறாகப் பெருகி வந்தே

   ஆளும் நகர்நனைத்த 

   அன்புநீர் வார்த்த  கதை !      

தாயி உதிர்த்த செந்நீர்

   தானாகப் பெருகி வந்தே

   தவிக்கும் வாய்க்க ளித்த

   தாயன்பு சுரந்த கதை !    

( கண்ணே )


பொறிஞர் " லாம ரெசின் "

   பொறுப்பானப் பெருந் தவத்தால்

    பொங்கும் பூம்பு னலாய்ப்

     புதுவைக்கு வந்த தண்ணீர் !   

அறிஞர் அவர்தொ டுத்த

    ஆற்றல் மிகுசூ ளுரையால்

     ஆறாய்ப் பாய்ந்து வந்த

     ஆரமுத நீரின் கதை !   

( கண்ணே )

                            -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக