இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

பனித் துளி

 பனித் துளி


பனித் திவலைகள்
மலர் படுகின்றன
அடுக்குகளின்
இடுக்குகளில்
இதழிறங்குகின்றன

மலர்களில்
தணிக்கை செய்யும்
தும்பியின் கால்களில்
இடர்படும்
பனி மொக்குகள்

உருளும்
துளிகளில்
சுழலும் உலகம்

ஒன்றை ஒன்று
அரவணைப்பதில்
மரணித்து விடுகின்றன

நெஞ்சம் நனைத்த
பனித் துளிகள்
சுகமானவை

கண் பனித்தலில்
ஒவ்வொரு துளியிலும்
இன்பம்

                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக