பனித் துளி
பனித் திவலைகள்
மலர் படுகின்றன
அடுக்குகளின்
இடுக்குகளில்
இதழிறங்குகின்றன
மலர்களில்
தணிக்கை செய்யும்
தும்பியின் கால்களில்
இடர்படும்
பனி மொக்குகள்
உருளும்
துளிகளில்
சுழலும் உலகம்
ஒன்றை ஒன்று
அரவணைப்பதில்
மரணித்து விடுகின்றன
நெஞ்சம் நனைத்த
பனித் துளிகள்
சுகமானவை
கண் பனித்தலில்
ஒவ்வொரு துளியிலும்
இன்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக