(தண்டகம்)
எடுப்பு
படித்ததைக் கேளுமம்மா !
முடிப்பு
படித்ததை என்ன என்பேன் ?
பாவலர் பாட - நன்றாளும்
நாவலர் கூட !
முடித்த அப்பணி நண்ணிய
முனிவோர்த் தேட - செம்மொழி
மகிழுற ஆட ! ( படி )
மெய்யென் றொருக்கால்
மேலுமே தூக்கி - அஞ்சிகின்றவர்
அச்சங்கள் போக்கி !
பொய்யெனக் கூறியப்
புல்லரை நீக்கி - மாந்தருக்கும்
மாண்பினைப் பெருக்கி ! ( படி )
மேதகு தீந்தமிழ் ஏற்றிட வல்ல
மின்னெழில் மொழியை நிலந்தனில் நல்ல
தீதிலாத் தமிழரும் அணிந்துமே செல்ல
தேன்'நா' பொழிகிற வணக்கமே சொல்ல ( படி )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக