அலைகள்
பிறைநிலா சிரிப்பில்
அமைதிப் பட்டுக்கிடக்கிறது
பெருங்கடல்
சலனமற்ற இரவில்
காற்று பேசிக்கொண்டிருக்கிறது
ஒரு புறம்
ஓய்ந்திருக்கும் படகுகளும்
சிதறித் தெறித்த சோழிகளும்
மௌனம் சாதிக்கின்றன
மற்றொரு புறம்
தூரத்தில் நின்றபடி
விட்டுவிட்டு ஒளி உமிழும்
கலங்கரை விளக்கம்
பனி பொழியும்
நெடும் மணல் பரப்பு
விடுத்து மீள்கிறேன்
கால்பற்றி இழுக்கும்
அலைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக