இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

அலைகள்

 அலைகள்


பிறைநிலா சிரிப்பில்
அமைதிப் பட்டுக்கிடக்கிறது
பெருங்கடல்

சலனமற்ற இரவில்
காற்று பேசிக்கொண்டிருக்கிறது

ஒரு புறம்
ஓய்ந்திருக்கும் படகுகளும்
சிதறித் தெறித்த சோழிகளும்
மௌனம் சாதிக்கின்றன

மற்றொரு புறம்
தூரத்தில் நின்றபடி
விட்டுவிட்டு ஒளி உமிழும்
கலங்கரை விளக்கம்

பனி பொழியும்
நெடும் மணல் பரப்பு
விடுத்து மீள்கிறேன்
கால்பற்றி இழுக்கும்
அலைகள்

                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக