அமைதி
ஆளரவமற்ற இடத்தில்
இரைச்சல் முழவிடும்
பேரருவி
அறுத்தோடும் வழிநெடுக
சலசலக்கும்
ஓடை
தொட்டுத் தொட்டுப்
பூவசைக்கும்
வண்டுகளின் ரீங்கார
தொனி
காலடி பதிவுகளுக்கு
இசை கோர்க்கும்
சறுகு
தொடர் கொத்துக்களில்
துளையிட்டு ஒலிபரப்பும்
மரங்கொத்தி
மூங்கில் ஓட்டைகளில்
தழுவித் தழுவி
இசைமுனுகும்
காற்று
யாருமற்ற தனிமையை
உறுதிப்படுத்தும்
'அக்கக்கோ' குருவியின்
கூக்குரல்
இப்படி
எல்லா ஒலிகளாலும்
புணரப்படுகிறது
ஒரு காட்டின்
அமைதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக