இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

அமைதி

 அமைதி


ஆளரவமற்ற இடத்தில்
இரைச்சல் முழவிடும்
பேரருவி

அறுத்தோடும் வழிநெடுக
சலசலக்கும்
ஓடை

தொட்டுத் தொட்டுப்
பூவசைக்கும் 
வண்டுகளின் ரீங்கார
தொனி

காலடி பதிவுகளுக்கு
இசை கோர்க்கும்
சறுகு

தொடர் கொத்துக்களில்
துளையிட்டு ஒலிபரப்பும்
மரங்கொத்தி

மூங்கில் ஓட்டைகளில்
தழுவித் தழுவி
இசைமுனுகும்
காற்று

யாருமற்ற தனிமையை
உறுதிப்படுத்தும்
'அக்கக்கோ' குருவியின்
கூக்குரல்

இப்படி 
எல்லா ஒலிகளாலும்
புணரப்படுகிறது
ஒரு காட்டின்
அமைதி

                 - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக