ஓவியம்
பசும் வயலில்
நிழல் பூசி செல்கின்றன
கருமுகிற் கூட்டங்கள்
ஏதிலியாய் வாடுகிறது
வெண்கொக்கு
குளிர்த் தென்றல்
உடல் மேவ
கணுக்காலில்
நீர் மோத
நகராமல்
கூர்த்த அலகில்
குறி வைத்தபடி
நிழல் கடந்தும்
மேனி அசையா
தனித்த தவம்
தூரத்து தூரிகையால்
என் கண்ணுக்குள்
தீட்டப்படுகின்றன
தனிமை ஓவியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக