இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 31 டிசம்பர், 2024

ஆறு

 மல்லாந்து படுத்திருந்தேன்


பாறையின் இடுக்கில்

தொடமுடியாத இடத்தில்

தொங்குந் தேன்கூடு


எப்பொழுது வேண்டுமானாலும்

விழலாம்

காத்துக் கொண்டிருக்கிறது

பழுத்தோலை


கூட்டைத் தாங்கும் கிளையில்

முட்டையைத் திருட 

ஊர்ந்து நெளியும்

பாம்பு


கலையா கருமேகங்களின் நிழல்

பைய வருடிச் செல்கின்றன


நிமிர்ந்து அமர்கிறேன்


இதையெல்லாம்

சட்டை செய்யாமல்

கடமைக்கு ஓடிக்கொண்டிருந்தது

ஆறு


                           -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக