மல்லாந்து படுத்திருந்தேன்
பாறையின் இடுக்கில்
தொடமுடியாத இடத்தில்
தொங்குந் தேன்கூடு
எப்பொழுது வேண்டுமானாலும்
விழலாம்
காத்துக் கொண்டிருக்கிறது
பழுத்தோலை
கூட்டைத் தாங்கும் கிளையில்
முட்டையைத் திருட
ஊர்ந்து நெளியும்
பாம்பு
கலையா கருமேகங்களின் நிழல்
பைய வருடிச் செல்கின்றன
நிமிர்ந்து அமர்கிறேன்
இதையெல்லாம்
சட்டை செய்யாமல்
கடமைக்கு ஓடிக்கொண்டிருந்தது
ஆறு
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக