அருவி
என்றென்றும் என் ஆசை
விழும்போதெல்லாம் மலையிறங்கும்
அருவியாக இருக்க
துள்ளல் , களியாட்டம்
உவகை
மீந்திருப்பவை என்னிடம்
வியப்புகளை அன்னாந்து
பார்க்கிறபோது
கால்தட்டுப்படுபவை
நான் கடந்து செல்லும்
இவைகள் தாம்
ஒருவேளை
காய்ந்துபோனாலும் கூட
என்னோடு ஒட்டியிருக்கும்
எச்சங்கள் இவைகளே
தெளிக்கும் ஒவ்வொரு
துளியிலும்
வீசும் சிலுசிலு சாரலிலும்
மனத்துள் நிறைவினை
வரையறுத்து கொள்கிறேன்
அருவிகள் முற்றிலும்
மரணித்து விடுவதில்லை
மனங்களைப் போல
மறுமுறை மறுமுறை
எழும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக