நேரம்
தாள் முழுதும்
எழுத்து தூறல்
சேர்ந்தும் இடமறிந்தும்
வழிந்து ஓடின
உள்ளத்து மழையின்
தோன்றலோ?
உரசும் சிந்தனைச்
சாரலோ?
மெல்ல மெல்ல
பெய்கையில்
பொருளற்றுப் படர்ந்த
புல்வெளியாய்க்
கவிதை
நுனிப்புல் மேய்கையில்
எதை எடுக்க?
எதை விடுக்க?
சலனமற்று கரைகிறது
நேரம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக