இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 20 டிசம்பர், 2024

கஜல் - 6

 

மயக்கத்தில் நானிருந்தேன் மல்லிகையாய் மணக்கின்றாய் !

தயக்கத்தில் நானிருந்தேன் தள்ளிநின்றுச் சிரிக்கின்றாய் !


வியப்புடனே நானிருந்தேன் வீதியோடி மறைகின்றாய் !

விளங்காமல் நானிருந்தேன் விடைகாண அழைக்கின்றாய் !


மழுங்கா உணர்வெடுத்து மஞ்சத்தில் சேர்த்துவிடு !

விழுங்கும் கடைபார்வை வித்தைகற்றுத் தந்துவிடு !


புழுங்கும் மனக்கதவைப் பூட்டாமல் திறந்துவிடு !

புரையோடும் மனப்புண்ணை புணுகாலே எழுதிவிடு !


                           - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக