மயக்கத்தில் நானிருந்தேன் மல்லிகையாய் மணக்கின்றாய் !
தயக்கத்தில் நானிருந்தேன் தள்ளிநின்றுச் சிரிக்கின்றாய் !
வியப்புடனே நானிருந்தேன் வீதியோடி மறைகின்றாய் !
விளங்காமல் நானிருந்தேன் விடைகாண அழைக்கின்றாய் !
மழுங்கா உணர்வெடுத்து மஞ்சத்தில் சேர்த்துவிடு !
விழுங்கும் கடைபார்வை வித்தைகற்றுத் தந்துவிடு !
புழுங்கும் மனக்கதவைப் பூட்டாமல் திறந்துவிடு !
புரையோடும் மனப்புண்ணை புணுகாலே எழுதிவிடு !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக