இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

கொலுசு

 கொலுசு


அறைக்குள்
தந்தியறுந்த
வீணையைத் தழுவியபடி 
நிலைத்தேன்

சன்னலினூடே
கொஞ்சிக் கொண்டே
முந்தியது கொலுசு
சத்தம்

நடைக்கேற்ற ஒலிப்பா ?
இசைக்கேற்ற நடையா ?
புரிதலுக்குள்
தாளம் தப்பும் 
மனது

கொலுசுகள் எப்போதும்
கொலுசுகள் தாம்
நடைகள் எப்போதும்
நடைகள் தாம்

பிசகும் சிந்தைக்குள்
பிசகாத இராகங்கள்
மீட்டுகிறது
சலங்கை ஒலி

                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக