கொலுசு
அறைக்குள்
தந்தியறுந்த
வீணையைத் தழுவியபடி
நிலைத்தேன்
சன்னலினூடே
கொஞ்சிக் கொண்டே
முந்தியது கொலுசு
சத்தம்
நடைக்கேற்ற ஒலிப்பா ?
இசைக்கேற்ற நடையா ?
புரிதலுக்குள்
தாளம் தப்பும்
மனது
கொலுசுகள் எப்போதும்
கொலுசுகள் தாம்
நடைகள் எப்போதும்
நடைகள் தாம்
பிசகும் சிந்தைக்குள்
பிசகாத இராகங்கள்
மீட்டுகிறது
சலங்கை ஒலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக