இராதே

இராதே
eradevadassou

திங்கள், 30 டிசம்பர், 2024

இரவச்சம்

 இரவச்சம்


உள்ளவற்றை மறைக்கின்ற நோக்கம் இன்றி

   உதவிடவே இருக்கின்றார் செல்வர் என்றே

பள்ளத்தில் பாய்கின்ற நீரைப் போலே

  பரிவுடனே கையேந்தி கேட்டல் தீதே !

வெல்லத்தை நாடுகின்ற எறும்பைப் போன்றே

   வேண்டிவேண்டி இரப்பதுவும் நன்றும் அன்றே;

செல்வங்கள் இல்லாத நிலையில் கூட

   சென்றெங்கும் இரவாமை சிறப்பின் மேன்மை !


கையேந்திப் பிச்சையினைக் கேட்போர் காணின்

   கண்துளிர்க்கும் கல்மனமும் கரையுந் தேம்பும்;

பொய்யேந்தி மறைக்கின்ற பொல்லாச் செல்வர்

  பொருளனைத்தும் பயனின்றிப் பாழாய்ப் போகும்;

நொய்யரசி கஞ்சியதே உணவா னாலம்

    நுகர்கின்ற உழைப்பாலே கிடைத்தால் இன்பம் ;

பொய்ப்பேசி ஊரெல்லாம் இருகை நீட்டிப்

   புகழ்ப்பிச்சை எடுப்பதுவே வாழ்வின் துன்பம் !


இழிநிலையே நேரிடினும் இரக்கம் இல்லார்

   இல்லத்தில் பிச்சையினைக் கேட்க வேண்டாம் ;

பொழிகின்ற செல்வங்கள் மறைக்குந் தீய

   பொல்லாதார் பொருள்கேட்டே அலைய வேண்டாம் ;

பழிமிரட்டும் தீச்செயல்கள் தீர நாளும்

   பல்லிளித்து பிச்சைதனை எடுத்தல் என்றே

மொழிகின்ற மூடத்தன முட்டாள் கூற்றால்

   முடங்கிடுமே மானமுமே பிச்சை கேட்டால் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக