இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

துயில்

 துயில்


இரவை அள்ளுகிறேன்
கைக்குள் மிதக்கின்றன
விண்மீன்கள்
நிலவும் நீந்துகிறது

கையுதற
கார்முகிற் காரிருளில்
மறைகிறேன்

கிழித்துகொண்டு நெளிகிறது
வெளிச்ச கீற்று

சடசடக்கும் சறுகுகளின் மேல்
தூறல்

துல்லியமாய் ஒலிக்கிறது
தூரத்து இடி முழக்கம்

நட்டநடு நிசியில்
யார் யாரோ தூங்குகிறார்கள் ?
தவிப்பில்
மனம் உரசும் துயரத்துடன்
பேச்சு வார்த்தை

புலரியில் 
மழை ஓய்ந்திருந்தது
தொடுவானம் வெளுக்கிறது

மெல்ல 
தூக்கத்தின் பிடியில்
கண்கள் அகப்படுகின்றன

விடிந்த போதும்
விடியாத துயரங்களுடன்
துயில்கிறேன்

             -   இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக