துயில்
இரவை அள்ளுகிறேன்
கைக்குள் மிதக்கின்றன
விண்மீன்கள்
நிலவும் நீந்துகிறது
கையுதற
கார்முகிற் காரிருளில்
மறைகிறேன்
கிழித்துகொண்டு நெளிகிறது
வெளிச்ச கீற்று
சடசடக்கும் சறுகுகளின் மேல்
தூறல்
துல்லியமாய் ஒலிக்கிறது
தூரத்து இடி முழக்கம்
நட்டநடு நிசியில்
யார் யாரோ தூங்குகிறார்கள் ?
தவிப்பில்
மனம் உரசும் துயரத்துடன்
பேச்சு வார்த்தை
புலரியில்
மழை ஓய்ந்திருந்தது
தொடுவானம் வெளுக்கிறது
மெல்ல
தூக்கத்தின் பிடியில்
கண்கள் அகப்படுகின்றன
விடிந்த போதும்
விடியாத துயரங்களுடன்
துயில்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக